Monday, March 16, 2026
26.1 C
Colombo
அரசியல்ரணில் மீது பொறாமைப்படுவதை நிறுத்தி விட்டு அவரின் அறிவை பயன்படுத்திக் கொள்க - வஜிர

ரணில் மீது பொறாமைப்படுவதை நிறுத்தி விட்டு அவரின் அறிவை பயன்படுத்திக் கொள்க – வஜிர

ரணில் மீது பொறாமைப்படுவதை விட்டுவிட்டு அவரின் அறிவை உரிய விதத்தில் பயன்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் விசேட கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும், வெறுப்பு, கோபம், பொறாமை இல்லாத ஒரு வாக்காளர் ஒரு நாள் வாக்குச் சாவடிக்குச் சென்றால், அவர் ஒரு நல்ல நாட்டை உருவாக்க முடியும் என அவர் தெரவித்தார்.

1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று 75 வருடங்களாக இலங்கையர்கள் அநீதி இழைக்கப்பட்ட ஒரு தேசம் என்று தெரிவித்த அவர் அந்த தவறை இப்போது திருத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles