மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலக தயாராகி வருகின்ற போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதனை தடுப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் பதவி விலகினால் முழு அமைச்சரவையும் பதவி விலகியதாக கருதப்படும் எனவும், அமெரிக்காவில் உள்ள நிதியமைச்சர் அலி சப்ரிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.