Thursday, July 17, 2025
29 C
Colombo
ஏனையவைஹப்புத்தளை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

ஹப்புத்தளை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

ஹப்புத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஹப்புத்தளை, ஐஸ்பில்லவில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு வந்த ஐவர், ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோட்டலின் உரிமையாளருடன் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த ஹோட்டலின் உரிமையாளர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

47 வயதுடைய கந்தர பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தற்போது மாத்தறை மேல் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு ஒன்றின் சாட்சியாளராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றவாளிகளை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles