Friday, September 20, 2024
29 C
Colombo
அரசியல்சபாநாயகரை 'பொய்க்காரன்' என திட்டிய சஜித்

சபாநாயகரை ‘பொய்க்காரன்’ என திட்டிய சஜித்

ஜனாதிபதி பதவி விலக தீர்மானித்துள்ளதாக, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார் என சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

113 பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு ஆட்சியை கையளிக்க தயாரென ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லையென சபாநாயகர் தெரிவித்தார்.

இதனை தொடர்பில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கட்சத் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்ன முன்னிலையில் கூறிய ஒரு விடயத்தை சபாநாயகர் தற்போது பொய்யானது என்றும் மறுக்கிறார்.

எனவே, சபாநாயகர் பொய்யுரைக்கிறார் என்றே நான் கூறவேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதன்போது, கருத்துவெளியிட்ட சபாநாயகர், அது தொடர்பில் சஜித் பிரேமதாஸ தவறான புரிதலை கொண்டுள்ளதாகவும், அவர் அதனை திரிபுபடுத்திக் கூறுவதாகவும் தெரிவித்தார்.

இதனை மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித், தொடர்ந்தும் சபாநாயகர் பொய்யுரைப்பதாகவும், அவர் கூறிய விடயத்தையே தான் இங்கு எவ்வித திரிபும் இன்றி முன்வைத்தேன். தற்போது அதனை மாற்றிக்கூறும் நீங்கள் சபாநாயகர் அல்ல பொய்யர். ஆசனத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபடவேண்டாம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles