முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சிவப்பு நிற சால்வையை அணியாமல் இன்று (05) நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
கடந்த காலங்களில் சால்வையுடன் வந்த அவர், இன்று அதை அணியாமல் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் சால்வையுடன் இன்று நாடாளுமன்றுக்கு வருகை தந்திருந்தனர்.