ஐஷ்வர்யா ரஜினிகாந்த் கடந்த பெப்ரவரி மாதம் வீட்டிலுள்ள லொக்கரில் வைத்திருந்த தங்க நகைகளை சரி பார்த்தபோது, தங்க மற்றும் வைர நகைகள் காணாமல் போயுள்ளதை அவதானித்துள்ளார்.
இது குறித்து ஐஷ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தேனாம்பேட்டை பொலிஸார் மேற்படி வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி என்பவரை விசாரணை செய்து, அவரது வங்கி விவரங்கள் உள்ளிட்டவைகளை கண்காணித்ததில், ஈஸ்வரி மேற்படி புகார்தாரர் வீட்டில் தங்க, வைர நகைகளை திருடியது தெரியவந்தது.
அதன்பேரில், ஈஸ்வரியிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர், மேற்படி வீட்டில் சுமார் 18 ஆண்டுகளாக வேலை செய்து வருவதும், ஐஷ்வர்யா தங்க, வைர நகைகள் அடங்கிய லொக்கரின் சாவியை வைத்து செல்லும் இடம் தெரிந்து, புகார்தாரரின் ஓட்டுநர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து லொக்கரில் இருந்து சிறிது சிறிதாக தங்க, வைர நகைகளை திருடியதும், திருடிய நகைகளை விற்று சென்னையில் வீடு மற்றும் பொருட்கள் வாங்கியுள்ளதும் தெரியவந்தது.