Saturday, August 9, 2025
30 C
Colombo
அரசியல்உள்ளூராட்சிக்கு முன் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் - லால்காந்த

உள்ளூராட்சிக்கு முன் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் – லால்காந்த

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று அரசாங்கம் விரும்புகிறது. ரணில் விக்ரமசிங்கவின் நிகழ்ச்சி நிரல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது அல்ல. ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தான். எமது அரசியலமைப்பின் பிரகாரம் நவம்பர் 19ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும். பொதுவாக 5 வருடங்கள் என்கிறோம். ஆனால்இ முதல் முறையாக அதிபராக வருபவர் இரண்டாவது முறை ஓட்டு கேட்டால், வேட்பாளராக 4 ஆண்டுகள் கழித்து வாக்களிக்கலாம். 5க்கு போக வேண்டிய அவசியம் இல்லை. என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles