மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குழுவொன்று ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறித்த செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வார இறுதி பத்திரிகைக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் பொதுஜன பெரமுனவினதும், அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல் முன்னணியினதும் தலைவர் . எனவே கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தலை வணங்குவதே எனது கொள்கை.
எவ்வாறாயினும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை சிறப்பாக செய்து வருகிறார். அவரை பதவியில் இருந்து நீக்க எந்த காரணமும் இல்லை என்றார்.