Thursday, September 19, 2024
28 C
Colombo
அரசியல்சர்வ கட்சி மாநாடு: ரணில் முன்வைத்த முக்கிய கருத்துகள்

சர்வ கட்சி மாநாடு: ரணில் முன்வைத்த முக்கிய கருத்துகள்

ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி மாநாடு இடம்பெற்ற போது, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த முக்கியமான விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • நாட்டில் தற்போது நிலவுகின்ற நெருக்கடி ஐந்து வருடங்களுக்கு தொடரும் என்ற அச்சம் இருக்கிறது.
  • தற்போது இலங்கைக்கு இரண்டு பெரும் சவால்கள் உள்ளன. 1) அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது, 2) பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது.
  • இந்த விடயத்தில் நாடாளுமன்றம் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வர வேண்டும்.
  • நெருக்கடி நிலையை போக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள எந்த அர்ப்பணிப்பான நடவடிக்கைகளையும் காண முடியவில்லை.
  • சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கையை பாராளுமன்றில் முன்வைக்கவில்லை.
  • புதிய வரவு செலவுத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் – ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத்திட்டம் தற்போது ஏற்புடையது அல்ல.
  • புதிய வரவு செலவுத்திட்டத்தில் அத்தியாவசிய விடயங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.
  • மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
  • சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை 6 மாதங்கள் வரையில் நீடிக்கலாம்.
  • இந்தியாவிடம் இருந்து கிடைத்த உதவிகள் மே மாதம் 2 வாரங்களுக்குள் தீர்ந்துவிடும்.
  • சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிணைமுறி உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும் வரையில் 6 மாதங்களுக்கு அரசாங்கத்திற்கு மேலதிக நிதி தேவை.
  • தற்போது இருப்பது ஒரேயொரு மாற்றுவழி மட்டுமே – அது, உதவி கோரும் அமைப்பு ஒன்றை உருவாக்கி, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் ஒத்துழைப்பு கோருவதுதான்.

Keep exploring...

Related Articles