Thursday, December 18, 2025
25 C
Colombo
அரசியல்மஹிந்தவிடம் கூறாமல் வெளிநாடு சென்ற கோட்டாபய

மஹிந்தவிடம் கூறாமல் வெளிநாடு சென்ற கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதாக தனது குடும்ப உறுப்பினர்கள் பலரிடம் அறிவித்திருந்த போதிலும், அது தொடர்பில் அவரது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 26ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றனர்.

இந்தக் குழுவினர் கடந்த 26ஆம் திகதி அதிகாலை 02.55 மணியளவில் எமிரேட்ஸ் நுமு-649 என்ற விமானத்தின் ஊடாக புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் பேத்தி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles