ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு கட்சிகளும் இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு கட்சிகளும், இந்த கட்சிகளுடன் இணைந்து செயற்படுகின்ற ஏனைய சிறு கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்டணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தலைவராக செயற்படுவார் என்று ஆரம்ப இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
