கடந்த அரசியல் நெருக்கடியின் போது, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) இலங்கை திரும்ப உள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து புறப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கும் பணிகளை அவர் ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.