இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று இரகசிய கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சர்களுக்கு அந்தந்த அமைச்சுக்களில் பொறுப்புக்களை வழங்காத அமைச்சர்களின் செலவுகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்காமல் இருப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரகசிய கலந்துரையாடலில் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதுடன், அமைச்சரவை அமைச்சர்களுக்கு பல விடயங்கள் ஒதுக்கப்பட்ட போதிலும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எவ்வித பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.