முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அரசியலில் குழந்தை என தெஹிவளை கல்கிசை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் தோல்விக்கு அரசியல் தெரியாத குழந்தையை தெரிவு செய்ததே காரணம்.
திறமையான இராணுவ அதிகாரியாக இருந்தாலும் தனக்கு அரசியல் தெரியாது என்பதை அவரே கூறியுள்ளார்.
அரசியல் தெரியாததினாலே அவரால் இதனை செய்ய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.