தற்போதைய நெருக்கடி நிலையை அடுத்த வருட ஆரம்பத்திற்குள் ஓரளவுக்கு தீர்த்து வைக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மஹர தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.