Friday, September 20, 2024
28 C
Colombo
அரசியல்வன்முறைகளுக்கு அடக்கு முறை தான் தீர்வு - நாமல் MP

வன்முறைகளுக்கு அடக்கு முறை தான் தீர்வு – நாமல் MP

கோட்டாபய ராஜபக்ஷ வன்முறைக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இன்று நிலைமை மாறியிருக்கும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய வன்முறைக்கு ஒரே தீர்வு அடக்குமுறைதான் என நேற்று முன் தினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்கேயாவது வன்முறையை கண்டால் அதை நாம் எதிர்ப்போம். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் கொடுப்போம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவாலும் அதைச் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை.

வன்முறையை முன்னெடுப்பவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வன்முறையைப் பரப்புபவர்களுக்கு எதிராக ஜனாதிபதி கோட்டாபய சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இன்று நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.

ஆனால் அந்த விடயத்தை ஜனாதிபதி ரணில் நிறைவேற்றி வருகின்றமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

எனக்கு போராட்டத்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அந்த போராட்டக்காரர்கள் மற்றும் போராட்டத்தை வழிநடத்திய அமைப்புக்கள் மீது தான் பிரச்சினை என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles