“டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியானால், சஜித் பிரேமதாச பிரதமரானால் அரசாங்கம் நன்றாக இருக்குமா? அதன் நிலை பரிதாபமாக இருக்குமல்லவா?” என டயனா கமகே MP நேற்று (27) பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் நீடிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், அண்மைய நாட்களில் நாட்டில் இடம்பெற்ற விடயங்களை குறிப்பிட விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் நடத்தை குறித்து அவர் குறிப்பாக கவனம் செலுத்தினார்.
அப்போது கருத்து தெரிவித்த அவர், அப்போதும் முன்னாள் ஜனாதிபதிக்கு அப்போதைய ஜனாதிபதி என்ற வகையில் இராஜதந்திர உரிமைகள் இருந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது அவரது கடவுச்சீட்டை முத்திரையிடாத குடிவரவு அதிகாரிகள் உடனடியாக இனங்காணப்பட்டு அவருக்கு எதிராக துரித விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இத்தகைய நடத்தைக்கான காரணங்களை அறிந்து கொள்வது அவசியம் என்றும் அவர் கூறினார்.