Monday, June 22, 2026
25.6 C
Colombo
அரசியல்மக்கள் ஆதரவில் நிச்சயம் வெல்வேன் - சஜித்

மக்கள் ஆதரவில் நிச்சயம் வெல்வேன் – சஜித்

நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப் பட்டிருந்தாலும் அது மக்களது ஆணை அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெவித்தார்.

அத்துடன், நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய சபை ஒன்று உருவாக்கப்படும் எனவும், அதனூடாக நல்ல யோசனைகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய சர்வகட்சி அரசாங்கம் என்பது நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கானதே தவிர அமைச்சுப் பதவிகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொள்வதற்கானது அல்ல.

நாட்டு மக்களின் நிலைப்பாடு ஒன்றாகவும் நாடாளுமன்றத்தின் நிலைப்பாடு வேறொன்றாகவும் இருக்கின்றன.

மக்கள் மத்தியில் சென்று வாக்கு கேட்கும் போது நிச்சயமாக தான் வெற்றி பெறுவதாக அவர் கூறினார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles