இன்று (20) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியாக டலஸ் அழகப்பெரும தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அந்த அரசாங்கத்தில் பலம் வாய்ந்த பதவி வழங்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதில் உறுதியாக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.