Friday, September 20, 2024
29 C
Colombo
அரசியல்பதில் ஜனாதிபதியின் விசேட உரை

பதில் ஜனாதிபதியின் விசேட உரை

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ‘இந்த நாட்டை’ மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 13ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்றபோது, ​​நாளொன்றுக்கு 5 மணி நேர மின்வெட்டால் பொருளாதாரம் சரிந்துவிட்டதாக அவர் விளக்கியுள்ளார்.

எனினும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் மின்சாரம் 3 மணிநேரமாக குறைக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்பட்டு நாட்டின் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு விநியோகிக்கப்படும் என்றும் ஜூலை 21 முதல் பெற்றோலும் விநியோகிக்கப்படும் என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், 2 ஏக்கருக்கும் குறைவான வயல்களில் பயிரிட்ட நெற்செய்கையாளர்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், நாட்டிலும் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் முடிவடையும் தருவாயில் இருப்பதுடன், வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்குறித்து விசாரணைகள் இன்மையால் இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முழுமையற்ற தன்மை காரணமாக இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் அவர்களின் புலனாய்வு சேவைகளின் உதவியை கோருவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே காரணம் என்பதுடன், பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகள் சமூகத்திற்குள் இருக்கின்றன. இந்த கூறுகள் நாட்டின் முன்னேற்றத்தை சீர்குலைப்பதில் இருந்து தடை செய்யப்படும். போராட்டக்காரர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்.

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனிநபரின் கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என, பதில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles