Wednesday, November 26, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வௌியான தகவல்

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வௌியான தகவல்

மூன்றாம் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது.

அதன்படி, டிசம்பரில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க முன்மொழிந்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது, அனைத்து துறைகளுக்கும் 6 சதவீத மிதமான அளவாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான முன்மொழிவுகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் திருத்தங்கள் தேவைப்படுமாயின், எதிர்வரும் திங்கட்கிழமை மின்சார சபைக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அனைத்து முன்மொழிவுகளும் பொது கலந்தாய்வுக்கு அனுப்பி இறுதி முடிவு எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles