கிழக்கு மாகாணத்தின் இரண்டு பாடசாலைகள் இன்று முதல் மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அங்கு நடைபெறவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் விபுலானந்த மகா வித்தியாலயமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் இந்து வித்தியாலயமும் இன்று (11) முதல் மூடப்படும் என மாகாணக் கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.ஜி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் ஏனைய பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும்.
குறித்த பாடசாலைகள் 23ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பயன்படுத்தப்படும் கிழக்கு மாகாண இரு பாடசாலைகள் எதிர்வரும் 24ஆம் திகதி திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.