ஏனையவைபாலத்தில் மோதிய பேருந்து: 7 பேர் படுகாயம்

பாலத்தில் மோதிய பேருந்து: 7 பேர் படுகாயம்

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் தங்காலை மரகொல்லிய பாலத்தில் இன்று (30) அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

பேருந்தின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், பேருந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் முன் இடது பகுதி சேதமடைந்துள்ளது.

இதன்போது பேருந்தில் இருந்த 5 பயணிகளும் ஆற்றில் விழுந்ததுடன், பொதுமக்கள் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles