ரணிலுக்கு நிகரான வேட்பாளர்கள் எவரும் இல்லை எனவும், மக்கள் வாக்களிக்கச் செல்ல வேண்டியது ஜனாதிபதியை பழிவாங்குவதற்காக அல்ல மாறாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதற்காக எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசியக் கொடி மக்களின் உரிமை என்பதால் அதனை தேர்தலில் பயன்படுத்த முடியும் எனவும் அந்த உரிமை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், வாக்குறுதி அரசியல் மேடைக்கு வந்து மக்களை ஏமாற்றுவதாகவும், வாக்குறுதி அரசியலின் விளைவே வங்குரோத்து நாடு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.