இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தனது ஆதரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தனது ஆதரவை மீளப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளார்.