Tuesday, September 17, 2024
29 C
Colombo
ஏனையவைதபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி நாள் இன்று

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி நாள் இன்று

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (05) நிறைவடையவுள்ளது.

அதன்படி, இன்று (05) நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தபால் வாக்கு விண்ணப்பதாரர்கள் மற்றும் ஏனைய வாக்காளர்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தபால் வாக்குகளை ஏற்றுக்கொள்வது இன்றுடன் முடிவடையும் எனவும், எக்காரணம் கொண்டும் அது ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles