Tuesday, September 17, 2024
29 C
Colombo
வடக்குஅனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி

அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட அனலைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிசார் மேற்படி பெட்டியை மீட்டுள்ளனர்.

அந்த பெட்டிக்குள் ஒரு தொலைத் தொடர்பு கருவி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Keep exploring...

Related Articles