Saturday, April 19, 2025
26 C
Colombo
வடக்குதாளையடி பகுதியில் 135 கிலோ கேரள கஞ்சா மீட்பு

தாளையடி பகுதியில் 135 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோகிராம் கேரள கஞ்சா இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

கஞ்ச கடத்தல் இடம் பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினரிற்க்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக வெற்றிலைக்கேணி கடற்படை, மற்றும் சிறப்பு அதிரடி படையினர் இணைந்து தாளையடி பகுதியில் சோதனை நடாத்தியுள்ளனர்.

இதன்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்கள் கைவிட்டு சென்றிருந்த 135 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணி கடற்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles