Friday, March 14, 2025
28 C
Colombo
ஏனையவைஇரு சகோதரர்களுக்கு நேர்ந்த கொடுமை - ஒருவர் மரணம்

இரு சகோதரர்களுக்கு நேர்ந்த கொடுமை – ஒருவர் மரணம்

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்தகந்த, லபுதுவ பிரதேசத்தில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பசமலுவ, ஹரஸ்பர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட நபர் மற்றும் அவரது சகோதரருக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் நேற்று (09) ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles