ரஷ்ய – உக்ரைன் போரில் கலந்து கொண்ட இலங்கை முன்னாள் இராணுவ வீரர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 06 பேர் ரஷ்யாவிலும் இருவர் உக்ரேனிலும் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஹரேந்திர ஜனகாந்த தெரிவித்துள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் இராணுவ வீரர்கள் 60 பேர் ரஷ்யாவுக்கும், 23 பேர் உக்ரைனுக்கும் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.