யாழ்ப்பாணம் – வேலணை – சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 5 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.
காணி ஒன்றில் மிதிவெடிகள் காணப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த காணிக்கு சென்ற பொலிஸார் மிதிவெடிகளை மீட்டுள்ளனர்.
குறித்த மிதிவெடிகளை நீதிமன்ற அனுமதியுடன், குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரால் அவற்றை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது