Friday, May 9, 2025
31 C
Colombo
வடக்குகிளிநொச்சியில் இரு பெண்களுடன் சிக்கிய நபர்

கிளிநொச்சியில் இரு பெண்களுடன் சிக்கிய நபர்

4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருளுடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமருகில் இரவு 11 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை சோதனை மேற்கொண்ட போது காரில் மறைக்கப்பட்ட நிலையில் 4 கிலோ தங்க கட்டியை மீட்டுள்ளனர்.

பல கோடி பெறுமதியான குறித்த தங்கத்தை வவுனியா நோக்கி கடத்த முற்பட்ட போதே அது மீட்கப்பட்டுள்ளது.

தங்க முலாம் பூசப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட காரும் அதன் சாரதி மற்றும் இரு பெண்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles