Sunday, May 19, 2024
27 C
Colombo
வடக்குகடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் கைது!

கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் கைது!

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் பாெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடவுச்சீட்டு காரியாலயம் முன் மாேசடிகள் இடம்பெற்றால் முறைப்பாடுகளை மேற்காெள்ளுமாறும் பொதுமக்களுக்கு பாெலிஸார் அறிவித்துள்ளனர்.

இன்று (24) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தாெடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும், அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை தொடர்ந்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய செயல்பட்ட தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தலைமையிலான குழுவினர், அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக சாேதனையில் ஈடுபட்டதுடன் மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என சந்தேகத்தின் பேரில் ஆறு பேரைகைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்காெண்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலி்ஸ் பரிசோதகர் ஜயத்திலக்க எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றால் தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான 0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

வானிலை குறித்து வௌியான சிவப்பு எச்சரிக்கை

கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவித்தலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150...

Keep exploring...

Related Articles