Saturday, March 15, 2025
28 C
Colombo
வடக்குகுளியலறையில் தவறி வீழ்ந்து கர்ப்பிணி தாயும் சிசுவும் பலி

குளியலறையில் தவறி வீழ்ந்து கர்ப்பிணி தாயும் சிசுவும் பலி

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் ஒருவர், குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரதுஇ வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று (22) அவர் விடுதியில் உள்ள குளியலறைக்குச் சென்ற நிலையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த தாயின் சடலம் மீட்கப்பட்டதுடன் அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திர சிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில்இ அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த இருவரின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles