ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (21) பிற்பகல் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.