ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று (20) கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக்கலந்துரையாடலில் எதிர்வரும் தேர்தலில் கட்சி எவ்வாறு போட்டியிட வேண்டும், ஜனாதிபதி வேட்புமனு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவர்களது கருத்து கேட்கப்பட உள்ளது.