Saturday, July 27, 2024
31 C
Colombo
கிழக்குசம்மாந்துறை பகுதியில் வீதியோர கடைகள் அகற்றம்

சம்மாந்துறை பகுதியில் வீதியோர கடைகள் அகற்றம்

சம்மாந்துறை பிரதேச சபையின் அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பாதசாரிகளுக்கு பல்வேறு வழிகளில் இடையூறை ஏற்படுத்தும் வீதியோர வர்த்தக நிலையங்களை அகற்றும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைவாக சம்மாந்துறை நகரத்திலிருந்து அம்பாறை வீதி, மல்கம்பிட்டி வீதி பொலீஸ் வீதி மற்றும் கல்முனை வீதிகளின் இரு மருங்குகளிலும் தற்காலிக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களினால் பாதசாரிகள் மட்டுமல்லாது வாகனங்களுக்கும் பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தி வருவதுடன் வீதி விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர்தலைமையில் கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்கம் உள்ளிட்ட ஒன்றிணைந்த குழுவினரால் இனங்காணப்பட்ட தற்காலிக வர்த்தக நிலையங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாண் விலையை காட்சிப்படுத்தாதோருக்கு எதிராக நடவடிக்கை

450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க...

Keep exploring...

Related Articles