Tuesday, September 17, 2024
29 C
Colombo
மலையகம்மஸ்கெலியாவில் ஆணொருவர் சடலமாக மீட்பு

மஸ்கெலியாவில் ஆணொருவர் சடலமாக மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று இரவு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.

விசாரணையின் போது உயிரிழந்த நபர், அதே தோட்டத்தைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான குமாரவேல் சுப்பிரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த ஜந்து நாட்களுக்கு முன் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles