Friday, June 20, 2025
31.1 C
Colombo
வடக்குசிறுமி படுகொலை: சந்தேக நபர் விளக்கமறியலில்

சிறுமி படுகொலை: சந்தேக நபர் விளக்கமறியலில்

தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (19) உத்தரவிட்டார்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்த 52 வயதான நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அவர் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் (19) பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் போது மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் உயிரிழந்த சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையாகினர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles