Tuesday, September 17, 2024
29 C
Colombo
மலையகம்வழுக்கி விழுந்து வயோதிபர் மரணம்

வழுக்கி விழுந்து வயோதிபர் மரணம்

நுவரெலியாவில் நேற்று வயோதிபர் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மழை நேரத்தில் தனது விவசாய தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது சுமார் 530 சென்றிமீட்டர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து அவர் தவறி வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக இன்று (15) நுவரெலியா மாவட்ட பொது ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles