ஆசியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஊழல் எதிர்ப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செல்லும் பாதை தெளிவாக இருந்தால், வேறு பாதைகளை காட்டி மக்களை தவறாக வழிநடத்துவது தேசத்திற்கு எதிரான குற்றமாகும்.
அத்துடன், ஒரு வருடம் எட்டு மாத காலப்பகுதிக்குள் நாட்டை சரியான பாதையில் கொண்டு சென்ற ஜனாதிபதியிடம் நாட்டை ஒப்படைத்தால், ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக இலங்கையை மாற்றுவது சர்வ சாதாரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.