Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
வடக்குகடலில் நீராடச் சென்று மாயமானவரின் சடலம் கரையொதுங்கியது

கடலில் நீராடச் சென்று மாயமானவரின் சடலம் கரையொதுங்கியது

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் நேற்று (29) சாலை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த நபர் அலையால் இழுத்து செல்லப்பட்டு நீரில் மாயமாகியிருந்தார்.

இந்த சம்பத்தினை தொடர்ந்து தேடுதல் நடாத்தியும் சடலம் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் நேற்று மாலை குறித்த குடும்பஸ்தரின் சடலம் சாலை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சம்பவத்தில் 33 வயதுடைய, 10 ஆம் வட்டாரம் புதிய குடியிருப்பினை சேர்ந்த இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் பிரேத பரிசோதனையினை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles