Monday, May 13, 2024
32 C
Colombo
அரசியல்சனத் நிஷாந்தவின் மறைவு கட்சிக்கும் மஹிந்தவுக்கும் பாரிய இழப்பாகும்

சனத் நிஷாந்தவின் மறைவு கட்சிக்கும் மஹிந்தவுக்கும் பாரிய இழப்பாகும்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கட்சிக்கும் புத்தள மாவட்ட மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்த புத்தளம் மற்றும் சிலாபம் மாவட்ட மக்களுக்காக உழைத்தவர் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். புத்தளம் மற்றும் சிலாபத்தில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளில் கலந்து கொண்டு கொழும்பு செல்லும் வழியில் அவர் இந்த விபத்தை சந்தித்துள்ளார்.

மே 9ஆம் திகதி அரகலய போராட்டத்தின் போது புத்தளத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லம் எரிக்கப்பட்டது. எனவே புத்தளத்தில் ஓய்வெடுக்க வீடு இல்லாத நிலையில், கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சனத் நிஷாந்த கலந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசாரணைகளின் படி, இராஜாங்க அமைச்சரின் சாரதி மதுபோதையில் இருக்கவில்லை என அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சனத் நிஷாந்த கட்சிக்கும் மாவட்டத்திற்கும் பெரும் பலமாக திகழ்ந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். இராஜாங்க அமைச்சரின் இழப்பை யாராலும் நிரப்ப முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles