ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று (25) கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு விஜயம் செய்தனர்.
இன்று(25) அதிகாலை கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்தனர்.
இதேவேளை, சனத் நிஷாந்தவின் மரணம் நாட்டுக்கு பாரிய இழப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.