Monday, May 13, 2024
32 C
Colombo
வடக்குஅதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் மரணம்

அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் மரணம்

யாழ்ப்பாணம் நகரை அண்டிய கலட்டி பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனையில் இளைஞன் போதைப்பொருளை அதீத அளவு நுகர்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தன்சல்களுக்கு அனுமதி பெறுவது கட்டாயம்

வெசாக் காலத்தில், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகரின் எழுத்துமூல அறிவித்தல் மற்றும் அனுமதி பெற்ற பின்னரே தன்சல்களை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு...

Keep exploring...

Related Articles