Monday, May 20, 2024
26 C
Colombo
மலையகம்நபர்களை மயக்கமுற செய்து கொள்ளையடித்த தம்பதி கைது

நபர்களை மயக்கமுற செய்து கொள்ளையடித்த தம்பதி கைது

நபர்களை மயக்கமுற செய்து, அவர்களிடம் இருந்து பணம், தங்க ஆபரணங்கள் போன்ற பெறுமதியான பொருட்களை கொள்ளையடிக்கும் தம்பதியரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருமணத்துக்கு அப்பாலான உறவில் இருந்த தவலந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் 46 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும், சந்தேகநபர்களான தம்பதியினர் நேற்று (18) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி பண்டாரவளை தெமோதர பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் பண்டாரவளை நகருக்கு வந்த போது, குறித்த தம்பதியினர் அந்த பெண்ணுடன் பேசி நட்பை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

குறித்த பெண் பொருளாதார சிரமத்தில் இருப்பதை அடையாளம் கண்டுஇ,குடும்பத்தை பொருளாதார ரீதியாக மீட்டெடுக்க அவர்கள் உதவுவதாகக் கூறியுள்ளதுடன்இ சில ஆயத்த ஆடைகளையும் கொடுத்து அவற்றை விற்பனை செய்யுமாறு கூறி, பெண்ணின் தொலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் ஆயத்த ஆடைகளை விற்பனை செய்த பின்னர் மீண்டும் அறிவிக்குமாறும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த பெண் விற்பனை செய்த சில ஆயத்த ஆடைகள் எஞ்சி இருப்பதாக தெரியப்படுத்தியதையடுத்து, அவற்றை எடுத்துக் கொண்டு நுவரெலியா நகருக்கு வருமாறு தம்பதியினர் கூறியுள்ளனர்.

மேலும் விற்பனை செய்ய ஆடைகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த பெண் தனது மகனுடன் நுவரெலியாவுக்கு சென்றதையடுத்து, அவர்களை நுவரெலியா பொதுக்கடைக்கு அருகில் வருமாறு சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

சந்திப்பின் போது, பயணித்து களைப்பாக இருப்பதாகக் கூறி அவர்களுக்கு ஒருவித பானமும், சிற்றுண்டியும் சந்தேக நபர்கள் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவற்றை சாப்பிட்ட பின்னர், அந்த பெண்ணும் அவரது மகனும் சுயநினைவை இழந்த நிலையில், சுயநினைவுக்கு வந்தபோது, ​​நுவரெலியா மருத்துவமனையில் இருந்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், சந்தேகநபர்கள் பெண்ணின் சுமார் ஐந்து இலட்சம் ரூபா மதிப்புள்ள தங்காபரணங்களையும், 2 கையடக்கத் தொலைபேசிகளையும், 5000 ரூபா பணத்தையும் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

அருகாமையில் உள்ள பல கடைகளில் இருந்த பாதுகாப்பு கமரா காட்சிகளை சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய ஜோடி அடையாளம் காணப்பட்டதுடன் சந்தேகநபர் பன்னில பிரதேசத்திலும் சந்தேகநபர் வட்டவளை பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், விசாரணையின் போது, ​​அவர்கள் 03 மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற குற்றங்களைச் செய்ததற்காக விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கண்டி, யாழ்ப்பாணம், பண்டாரவளை, ஜாஎலஇ குருநாகல் மற்றும் ஹட்டன் ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேகநபர் மற்றும் சந்தேக நபருக்கு எதிராக முன்னைய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Keep exploring...

Related Articles