Saturday, September 21, 2024
28 C
Colombo
வடக்குசட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக இரவு நேர கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஓலைத்தொடுவாய் கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கி கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 12 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதன் போது 4 படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 968 கடலட்டைகள், 34 சங்குகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னாரைச் சேர்ந்த 22 வயதுக்கும் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் மற்றும் சங்குகள் ஏல விற்பனை ஊடாக விற்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles