Sunday, March 15, 2026
28 C
Colombo
வடக்கு14 வயது சிறுமியை வன்புணர்ந்த பெரியப்பா கைது

14 வயது சிறுமியை வன்புணர்ந்த பெரியப்பா கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் குளிர்பானத்தில் மயக்க மருந்தினை கலந்து சிறுமிக்கு அதனை கொடுத்து வன்புணர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles