உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஹேனிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று(11) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, பிரித்தானிய இளவரசி ஹேன் நேற்று நாட்டை வந்தடைந்தார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய அவரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.