மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கனமழையுடன் ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக ரயில் இயக்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்புக்கு இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.